( 21 Sep, 2015) TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3 Published By : upscgk.com இசையமுது சொல்பொருள் * வானப்புனல் - மழைநீர் * வையத்து அமுது - உலகின் அமுதம் * வையம் - உலகம் * தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல் * புனல் - நீர் * பொடி - மகரந்தப் பொடி * தழை - செடி * தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம் * தழைத்தல் - கூடுதல், குறைதல் * தழைக்கவும் - குறையவும். * புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன். * இயற்பெயர் - கனகசுப்புரத்தினம் * பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். * காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72) * பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் * திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார். * படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு. * கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு. * கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு. * இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு. * பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில். பழமொழி நானூறு சொல்பொருள்: * ஆற்றவும் - நிறைவாக * நாற்றிசை - நான்கு + திசை * ஆற்றுணா - ஆறு + உணா * வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர். * பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார். * முன்றுறை என்பது ஊர்ப்பெயர் * அரையன் - அரசனைக் குறிக்கும் சொல் * பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு. * பழமொழியில் உள்ள பாடல்கள் - 400 * ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. * ஆற்றுணா வேண்டுவது இல் என்பது - கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா என்பது பொருள். பொருள்: * ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்" * ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு) * குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி. உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் * நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு * நேருவின் துணைவியார் பெயர் - கமலா * தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது. * நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார். * பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது. * நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. * நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள். * போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய் * அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல். * கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து. * இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி. * தழை என்பதன் பொருள் - செடிகொடி. குறிப்பு: * சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர். * மில்டன் - ஆங்கில கவிஞர். * பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர். * காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்). * டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார். * பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர். * பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்). * கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர். * நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி. * ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன். இலக்கணம்: * ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது. எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள. இதனை இரட்டைக்கிளவி என்பர். செய்யுள்: சித்தர் பாடல் * சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள். * "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர். * உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர். * சித்து - அறிவு * கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54. * நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர். * பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள். * வேம்பு - கசப்பான சொற்கள். * வீறாப்பு - இறுமாப்பு * கடம் - உடம்பு. * சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது. * கடம் - உடம்பு * வெய்யவினை - துன்பம் தரும் செயல் * சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது * பலரில் - பலர் + இல்(வீடுகள்) கவிதை: தாகம் * யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது. * கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. * இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன். * புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான். * தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா * இயற்பெயர்: இராமசாமி். * பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள். * பிறந்த ஊர்: ஈரோடு. * தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன. * போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார். * தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை. * பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973 * சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது. * மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. * பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர். * பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள். * பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார் - 13,12,000 கி.மீ * பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம். பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம். செய்யுள்: புறநானூறு: * புறநானூறு = புறம் + நான்கு + நூறு. * தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல். * இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. * அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர், நண்பர் - ஔவையார். * சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார். * நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார். சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர். * ஔவை என்பதன் பொருள் - தாய். பாடல் வரிகள்: * எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார் பொருள்: * அவல் - பள்ளம் * மிசை - மேடு, * நல்லை - நன்றாக இருப்பாய். புதுக்கவிதை: திண்ணையை இடித்துத் தெருவாக்கு! * திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். * ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர். * காலம்: 26.02.1947 - 13.05.2000 * பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள். * பாடல்வரிகள் சில: "கடலின் நான் ஒரு முத்து" எத்தனை உயரம் இமயமலை- அதில் இன்னொரு சிகரம் உனதுதலை" பூமிப்பந்து என்ன விலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை! உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கர் * பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார். * பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். * இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை. கல்வி: * தொடக்கக்கல்வி - கமுதியில் கிறித்துவ பாதிரியார்களிடம் பெற்றார். * பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். * இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. * தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர். * சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்தார். * முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள். * முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார். * நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார். * சமபந்தி முறையை ஆதரித்தார். * தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார். * தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962) * தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர். * சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை. * 1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. * தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது. * முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 இல் மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வருகை தந்தார். * முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார். * 17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார். * உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள். * உம்பர் என்றால் மேலே என்று பொருள். * உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார். * கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1. இவரின் கூற்றுகள்: * சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை. * வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். * பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு. * மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார். * மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்) இலக்கணம்: * சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை) எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன. * அகச்சுட்டு - அவன், இவன் * புறச்சுட்டு - அப்பையன் * சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம். * தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்? * வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்? யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்? * சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள். * தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன். பொருள்: * ஈரம்- அன்பு, * அனைஇ - கலந்து * படிநு - வஞ்சம் * அகன் - உள்ளம், * அமர் - விருப்பம் * செம்பொருள் - சிறந்த பொருள் * துவ்வாமை - வறுமை * அல்லவை - பாவம்* நன்றி - நன்மை * சிறுமை - துன்பம் * ஈன்றல் - தருதல், * வனகொல் - கடுஞ்சொல் * கவர்தல் - நுகர்தல். * உதுக்காண் - சற்றுத் தொலைவில் பார் * உப்பக்கம் - முதுகுப்பக்கம் * உம்பர் - மேலே